/ மாவட்ட செய்திகள்
/ தென்காசி
/ திருக்குறள் பின்னணியில் சிவதாண்டவம் | 115 people perform bharatanatyam for world record
திருக்குறள் பின்னணியில் சிவதாண்டவம் | 115 people perform bharatanatyam for world record
தென்காசி அன்னை கலை வெள்ளி விழா அகாடமி சார்பில் 115 பேர் ஆடிய பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை தென்காசி சங்கம் மற்றும் ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஏற்பாடு செய்திருந்தது. 115 பேர் இணைந்து திருக்குறள் பின்னணியில் சிவதாண்டவம் நடனத்தை தொடர்ந்து 20 நிமிடங்கள் ஆடி அசத்தினர். இதை உலக சாதனையாக அங்கீகரித்து ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவன ஜேக்கப் ஞான செல்வம் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர் எஸ்தர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
ஆக 25, 2024