/ மாவட்ட செய்திகள்
/ தென்காசி
/ 100 வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்ட கொள்ளையன் ரமேஷ் | Notorious robber arrested|Alangulam
100 வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்ட கொள்ளையன் ரமேஷ் | Notorious robber arrested|Alangulam
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ராம்நகர் பஸ் நிறுத்தம் அருகில் ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வேகமாக வந்தவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின் பேரில் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கையில் நெல்லை கொண்டாநகரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்ற ராமையா வயது 38 என தெரியவந்தது.
மே 16, 2024