/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ உலகிலேயே மிக உயரமான நடராஜர் சிலை வடிவமைத்த ஸ்தபதி ராதாகிருஷ்ணன் | Kumbakonam | Padma Shri award
உலகிலேயே மிக உயரமான நடராஜர் சிலை வடிவமைத்த ஸ்தபதி ராதாகிருஷ்ணன் | Kumbakonam | Padma Shri award
டில்லியில் கடந்த 2023 ம் ஆண்டு ஜி-20 மாநாடு நடைபெற்றது. இதன் நுழைவு வாயிலில் 28 அடி உயரம், 21 அகலம் மற்றும் 20 டன் எடையில் பிரமாண்ட தாண்டவ நடராஜர் சிலை நிறுவப்பட்டது. எட்டு உலோக கலவையில் உருவாக்கப்பட்ட இந்த சிலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கலைநயத்துடன் தத்ரூபமாக தாண்டவ நடராஜர் சிலையை வடிவமைத்த சுவாமிமலை ஸ்ரீ தேவசேனாதிபதி சிற்பக்கூடத்தின் ஸ்தபதி ராதாகிருஷ்ணன் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகி உள்ளார். விருது கிடைத்தது தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என ஸ்தபதி ராதாகிருஷ்ணன் பெருமிதம் கொண்டார்.
ஜன 28, 2025