ச்சலடித்து கரை சேர்ந்த காட்டு யானை | Wild elephant that fell in to the shutter | Periyar Dam
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் ஷட்டர் தேக்கடி வனத்துறை சோதனைச் சாவடி அருகே உள்ளது. தேக்கடி ஏரியில் இருந்து ஷட்டர் வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூர திறவை வாய்க்காலில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை ஷட்டருக்குள் தவறி விழுந்தது. தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் ஷட்டரில் சிக்கி நீண்ட நேரம் வெளியே வர முடியாமல் போராடியது. தொடர்ந்து தமிழகப் பகுதிக்கு வெளியேறும் தண்ணீரை நிறுத்தப்பட்டது. யானை சிறிது தூரம் நீந்தி சென்று கரை வழியாக ஏறி வனப்பகுதிக்குள் சென்றது. இதற்கு முன்பாக கேரள வனத்துறையினர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் இருந்தனர். ஆனால் யானை தானாக வெளியேறி சென்றதால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.