/ மாவட்ட செய்திகள்
/ திருநெல்வேலி
/ அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் | Tirunelveli The Conductor who hit the passenger was suspended
அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் | Tirunelveli The Conductor who hit the passenger was suspended
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைபட்டி பஸ் ஸ்டாப்பில் அரசு டவுன் பஸ் நின்றது. பயணி ஒருவர் மூட்டை முடிச்சுகளுடன் ஏறினார். கண்டக்டர் சேதுராமன் கூட்ட நேரத்தில் மூட்டை முடுச்சுகளுடன் ஏறக்கூடாது என பயணிகை கண்டித்தார். படியில் நின்று கொண்டு பயணித்தார். இதனால் பயணியை கீழே இறங்கும்படி கண்டக்டர் கூறினார். அவர் கேட்கவில்லை. தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கொதிப்படைந்த கண்டக்டர் பயணியை தகாத வார்த்தையால் திட்டி, அவரது கன்னத்தில் பளார் விட்டார். இதை பயணிகள் சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டனர். பயணியை அடித்த கண்டக்டரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சரவணன் உத்தரவிட்டார்.
நவ 04, 2024