/ மாவட்ட செய்திகள்
/ திருப்பத்தூர்
/ பணம் பட்டுவாடா குறித்து விசாரணை | ₹ 45,000, boothslip to be distributed to voters seized
பணம் பட்டுவாடா குறித்து விசாரணை | ₹ 45,000, boothslip to be distributed to voters seized
திருப்பத்தூர் மாவட்டம் வள்ளிப்பட்டு திம்மனூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 4 பேரை மடக்கினர். அவர்கள் பணம் மற்றும் பூச் சிலிப்பை சாலையில் வீசிவிட்டு தப்பி சென்றனர். சாலையில் சிதற விட்ட 45 ஆயிரம் ரூபாய் மற்றும் பூத் சிலிப்புகளை பறிமுதல் செய்து வாணியம்பாடி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய கும்பல் எந்த கட்சி வேட்பாளருக்காக பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டது என விசாரணை நடக்கிறது.
ஏப் 16, 2024