Strong man of South indian-2024 பட்டம் வென்ற பாட்டி | Tiruppur | national weightlifting competition
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் கிட்டம்மாள் வயது 82. இவரது பேரன்கள் ரோகித் மற்றும் ரித்திக் ஆகியோர் தேசிய பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். பாட்டி கிட்டம்மாள் தனது பேரன்களுடன் தினமும் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். பாட்டியின் ஆர்வத்தைக் கண்ட பயிற்சியாளர் சதீஷ் கோவையில் கடந்த மே 1ம் தேதி Indian fitness federation சார்பில் நடைபெற்ற தேசிய பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க செய்தார். 50 கிலோ எடையை தூக்கி முதல் முயற்சியிலேயே 5ம் இடத்தை பிடித்தார். அதைத் தொடர்ந்து Strong man of South indian-2024 பட்டம் வென்றார். கடந்த வாரம் கோவையில் amateur powerlifting association of coimbatore சார்பில் நடைபெற்ற மாநில போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் 2ம் இடத்தை பிடித்தார். இப்போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மும்பையில் நடைபெற உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க பாட்டி கிட்டம்மாள் தேர்வானார். திறமைக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்த பாட்டி கிட்டம்மாளுக்கு பாராட்டு குவிகிறது.