/ தினமலர் டிவி
/ பொது
/ பஹல்காம் தாக்குதல் மர்மம் அறிய புது டெக்னாலஜி | 3D mapping | Baisaran meadow | Pahalgam attack
பஹல்காம் தாக்குதல் மர்மம் அறிய புது டெக்னாலஜி | 3D mapping | Baisaran meadow | Pahalgam attack
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு விசாரணையை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. தாக்குதல் நடந்த இடத்தில் ஆதாரங்களை தேடும் பணியில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வழக்கு குறித்து முக்கிய ஆவணங்கள், எப்.ஐ.ஆர்., நகல் ஆகியவற்றை என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஒப்படைத்தனர். இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கண்டறிய 3டி வரைபடம் மூலம் துப்பறியும் பணியை என்ஐ.ஏ அதிகாரிகள் துவங்கி உள்ளனர்.
மே 01, 2025