இந்திய சாட்டிலைட்கள் எண்ணிக்கை 3 மடங்கு ஆகும் | 40 Storey Tall Rocket | 75000 Kg Satellite | ISRO
40 மாடி கட்டடத்தின் உயரத்துக்கு ராக்கெட்! இஸ்ரோ தலைவர் புது அப்டேட் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உரையாற்றினார். அவர் கூறும்போது, NAVIC செயற்கைக்கோள் மற்றும் N1 ராக்கெட் திட்டங்களில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. அத்துடன் 6 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட, அமெரிக்காவின் தகவல் தொடர்பு செயற்கைகோளை இந்திய ராக்கெட் மூலம் பூமியின் சுற்று பாதையில் நிலை நிறுத்துவதற்கான பணிகள் நடக்கிறது. 75 ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கை கோள்களை தூக்கி சென்று பூமியின் சுற்று பாதையில் நிலை நிறுத்தும் வகையில் மிகப்பெரிய ராக்கெட்டை உருவாக்க இருக்கிறோம். இந்த ராக்கெட்டின் உயரம் 40 மாடி கட்டடத்தின் உயரத்துக்கு இருக்கும். விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை சோதித்து பார்க்க உதவும் TDS எனப்படும் Technology Demonstration Satellite மற்றும் GSAT-7R என்னும் ராணுவ தகவல் தொடர்பு செயற்கைகோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். GSAT-7R செயற்கைக்கோளானது தற்போது உள்ள GSAT-7 செயற்கைகோளுக்கு மாற்றாக, இந்திய கப்பல் படைக்கென தனியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பூமியின் சுற்று பாதையில் இந்தியாவின் 55 செயற்கை கோள்கள் உள்ளன. இன்னும் 3 அல்லது 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3 மடங்காக அதிகரிக்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு தெலங்கானா கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா Jishnu Dev Varma கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.