சிவராமன் தந்தை மரணத்தில் விலகியது மர்மம்! | Accused Sivaraman | Krishnagiri NCC Camp Issue
சிவராமன் தந்தை இறந்தது எப்படி? வெளியானது சிசிடிவி கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் இன்று காலை இறந்தார். எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று அதிகாலை இறந்ததாக கூறப்பட்டது. தொடர்ச்சியாக அவரது தந்தை அசோக்குமாரும் இறந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது. சிவராமன் தந்தை அசோக்குமார் வயது 61. அவர் நேற்றிரவு மது போதையில் சென்று சாலை விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. அடுத்தடுத்து இருவரும் இறந்த விவகாரம் சந்தேகத்தை கிளப்பியது. இந்த சூழலில் அசோக் குமார் பைக்கில் இருந்து விழுந்து இறக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இரவு 10 மணி அளவில் காவேரிப்பட்டினம் திருமண மண்டபம் அருகே பைக்கில் வந்த அவர் நிற்க முடியாமல் தடுமாறுகிறார். பைக்கில் தலையை சாய்த்து கொஞ்ச நேரம் நிற்கிறார்.