ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்: ஸ்டாலின் மூக்கை உடைத்த சிவசேனா Aniti Hindi Protest in Maharashtra | San
மகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்பிக்க அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது பாஜ தலைமையிலான மாநில அரசின் நடவடிக்கைக்கு சிவசேனா உத்தவ் கட்சி, ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, ஹிந்தி மொழிப்பாடம் குறித்த உத்தரவை மகாராஷ்டிர அரசு திரும்ப பெற்றது. எனினும், ஏற்கனவே திட்டமிட்டபடி, மும்பையில், உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி, மராத்தி மொழிக்கு ஆதரவாகவும், ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும் குரல் எழுப்பினர். மகாராஷ்டிராவில், உத்தவ் தலைமையில் நடந்த கூட்டம் குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் கருத்து பதிவிட்டிருந்தார்.