/ தினமலர் டிவி
/ பொது
/ அரசு பள்ளியின் கூரையை கூட சரி செய்யாத அவல ஆட்சி | Annamalai | Ex state president | BJP | Govt school
அரசு பள்ளியின் கூரையை கூட சரி செய்யாத அவல ஆட்சி | Annamalai | Ex state president | BJP | Govt school
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த பந்தலூரில் வெள்ளியன்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில், அங்குள்ள தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளி கூரை மொத்தமாக பறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பகல் நேரத்தில், பள்ளி குழந்தைகள் இருக்கும் நேரத்தில் இதுபோன்று நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே பயமாக இருப்பதாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன், 10,000 புதிய பள்ளி கட்டடங்கள் கட்டப்படும் என்று வாக்குறுதி கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது.
ஜூலை 26, 2025