உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி தலைவர்கள்

தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி தலைவர்கள்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று இரவு சென்னையில் படுகொலை செய்யப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது தாங்கள் தான் என, 8 பேர் தாமாக முன்வந்து போலீசில் சரணடைந்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தியுள்ளனர்.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி