நடுத்தெருவில் பிறந்த குழந்தை; பாங்காக்கில் நெகிழ்ச்சி சம்பவம் Woman gives birth Bangkok street
நடுத்தெருவில் பிறந்த குழந்தை; பாங்காக்கில் நெகிழ்ச்சி சம்பவம் Woman gives birth Bangkok street Earthquake 1000 dies police general hospital viral video மியான்மரில் நேற்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 7.7 மற்றும் 6.4 என இரண்டுமே கடுமையான நிலநடுக்கம் என்பதால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கங்களின் தாக்கம் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரிலும் கடுமையாக உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கின. நீச்சல் குளங்கள் திடீரென ஓவர்ஃபுல்லாகி வழிந்தன. இதனால் பாங்காக் மக்கள் அலறியடித்து தெருக்களுக்கு ஓடினர். பாங்காங் நகரிலுள்ள போலீஸ் பொது மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆபரேஷனை துவங்கிய பிறகு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. உடனடியாக அந்த பெண்ணை செயற்கை சுவாச கருவிகளுடன் ஸ்ட்ரெச்சரில் வைத்து தெருவுக்கு டாக்டர்கள் கொண்டு சென்றனர். நடுத் தெருவில் குழந்தையை சிசேரியன் மூலம் வெளியே எடுத்தனர். 1000 பேரை பலிவாங்கிய நிலநடுக்கத்தின் கோர முகத்தை காட்டும் வீடியோக்களுக்கு மத்தியில், தெருவில் குழந்தை பெற்ற பெண்ணின் வீடியோவும் வைரலாக பரவி வருகிறது. மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் போலீஸ் அதிகாரி Sirikul Srisanga சிரிகுல் ஸ்ரீசங்கா கூறியதாவது: