பாஜ பொதுச்செயலாளர் காரை நொறுக்கிய கும்பல்-அதிர்ச்சி BJP Kumbakonam Selvaraj Car Case|BJP vs DMK
கும்பகோணம் அருகே வளையப்பேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பாஜவின் தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கிறார்.
இவருக்கு சொந்தமான காரில் தம்பி சுரேஷ் மற்றும் சிலர் திருவாரூர் சென்று விட்டு ஊர் திரும்பினர். காரை திருப்புறம்பியத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் ஓட்டினார்.
திருச்சேறை பகுதியில் கார் வந்த போது, எதிரே மின்னல் வேகத்தில் ஒரு பைக் வந்தது. கார் மீது மோதுவது போல் வந்ததால், பைக் ஓட்டிவரை டிரைவர் சத்தம் போட்டார்.
உடனே பைக்கை நிறுத்தி விட்டு வந்த கும்பல் காரில் இருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் தங்கள் நண்பர்களுக்கும் போன் போட்டு அழைத்தனர்.
அவர்கள் வந்ததும் கார் டிரைவர் ஸ்டாலினை கொடூரமாக தாக்கினர். கம்பு, கட்டையால் அடித்தம், கல் எறிந்தும் காரை நொறுக்கினர்.
அந்த பகுதியே கலவரம் போல் மாறியது. உள்ளூர் மக்கள் ஓடி வந்தனர். அதன் பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
சம்பவம் தொடர்பாக நாச்சியார்கோயில் போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடக்கிறது.