செல்போன் சிக்னல் கிடைத்ததை கொண்டாடும் கிராமம் | BSNL 4G | BSNL | Kannuthu
இதுக்கு தான் BSNL வேணுங்கறது! ஒரு ஊரே விழா எடுத்து கொண்டாடுது சத்தம் இல்லாமல் நடத்துள்ள சாதனை! திருச்சி மணப்பாறை அருகே உள்ளது கண்ணூத்து கிராமம். இங்கு 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 4 பக்கமும் மலைகளால் சூழப்பட்ட ஊர் இது. சுற்றியும் மலைகள் இருப்பதால் கண்ணூத்தில் தொலைதொடர்பு வசதி இல்லாமல் இருந்தது. தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களிடம் கிராம மக்கள் கேட்டும் யாரும் டவர் அமைக்க முன்வரவில்லை. சிக்னல் கொண்டு வர முடியாது என கூறி கை விரித்துவிட்டனர். கடும் சவால்களுக்கு மத்தியில் பிஎஸ்என்எஸ் கண்ணூத்தில் கிராமத்தில் செல்போன் டவர் அமைத்துள்ளது. தாமதமாக வந்தாலும் இவ்வளவு நாள் சிக்னல் கிடைக்காமல் அள்ளாடி வந்த ஊருக்கு 4ஜி வசதி கிடைத்துள்ளது.