/ தினமலர் டிவி
/ பொது
/ பஸ் ஏற வந்தவர் பையில் ₹1 கோடி ரொக்க பணம் | Bus passenger | ₹1 Crore cash | Caught in polic
பஸ் ஏற வந்தவர் பையில் ₹1 கோடி ரொக்க பணம் | Bus passenger | ₹1 Crore cash | Caught in polic
திருச்சி தொட்டியம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு உள்ள பஸ் ஸ்டாண்டில் ஒருவர் கையில் பையுடன் நீண்ட நேரமாக நின்றிருந்தார். பஸ் ஸ்டாண்டில் ரோந்து சென்ற போலீசார் விசாரித்தபோது, அவர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கோபிநாத் என்பது தெரிந்தது. பஸ்சுக்காக காத்திருப்பதாக கூறியதால், போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டனர். நீண்ட நேரம் கழித்து வந்தபோதும் கோபிநாத் அங்கேயே நின்றிருந்தார். சந்தேகம் வலுத்ததால், அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தனர். பை முழுவதும் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் இருந்தன.
ஜூலை 13, 2025