/ தினமலர் டிவி
/ பொது
/ ஓடும் பஸ்சில் நடந்தது என்ன? பையை திறந்தால் அதிர்ச்சி | Bus | Theft | Kanyakumari Bus Chain Snatch
ஓடும் பஸ்சில் நடந்தது என்ன? பையை திறந்தால் அதிர்ச்சி | Bus | Theft | Kanyakumari Bus Chain Snatch
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் நோக்கி டவுன் பஸ் கிளம்பியது. வழியில் பால்பண்ணை பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண் ஏறி இருக்கிறார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே அந்த பெண்ணின் போக்கு சரியில்லை. அருகில் இருப்பவர்களை நோட்டமிட்டு கொண்டே இருந்தாராம். கூட்ட நெரிசலில் பக்கத்தில் நின்ற பெண்ணின் 5 சவரன் நகையை நைசாக திருடி இருக்கிறார். இதனை கவனித்த சக பயணிகள் அந்த பெண்ணை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். இருந்தும் கூட்டத்தை தள்ளிவிட்டு அந்த பெண் ஓட முயற்சி செய்துள்ளார். பயணிகள் துரத்தி சென்று பிடித்து பஸ்சுக்குள் அமர வைத்தனர்.
டிச 18, 2024