வயநாடு நிலவரம் என்ன? கேட்டறியும் பிரதமர் மோடி Central Minister | Nityanand Rai | Rajya Shaba | Call
ராஜ்ய சபாவில் வயநாடு நிலசரிவு தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார். வயநாடு நிலசரிவுக்கு பிறகான சூழ்நிலைகளை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருகிறார். கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கிறது. பேரிடர் மீட்பு நிதியில் இருந்து இன்று மட்டும் கேரள அரசுக்கு ரூ.145 கோடி அனுப்பப்பட்டது. அந்த நிதியில் இன்னும் ரூ.394 கோடி மீதி உள்ளது. மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பிரதமரின் உத்தரவுப்படி நேற்று இரவு வயநாடு சென்றார். அங்குள்ள நிலைமையை பிரதமர் மோடிக்கு உடனுக்குடன் கூறி வருகிறார். ம த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் பேசினார். தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்ற உறுதியை அளித்துள்ளார்