உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை பெண் மரணத்தில் திமுகவுக்கு அண்ணாமலை கிழி chennai drainage death | annamalai vs dmk | chennai

சென்னை பெண் மரணத்தில் திமுகவுக்கு அண்ணாமலை கிழி chennai drainage death | annamalai vs dmk | chennai

சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் தொட்டியில் தவறி விழுந்து பெண் ஒருவர் இறந்து விட்டார். இந்தத் தொட்டியை சரியாக மூடாமல் மட்டப்பலகையை வைத்து மூடியிருந்ததாகவும், தெரியாமல் அதில் கால் வைத்த பெண், மட்டப்பலகை உடைந்து தவறி விழுந்து இறந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அது மழை நீர் வடிகால் தொட்டி அல்ல; வண்டல் தொட்டி என்று புதுவிதமான விளக்கத்தை அளித்திருக்கிறது சென்னை மாநகராட்சி. மேலும், இறந்த பெண்ணின் வாய் மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள்.

செப் 02, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
செப் 05, 2025 14:33

இதன் மூடிகள் பெரிதாக இருக்கின்றன. நிறைய இடங்களில் உடைந்தும் காணப்படுகின்றன. எடுத்து மூடுவதற்கு கஷ்டம். பல இடங்களில் மேடுகளாக்கி மூடிவிடுகின்றனர். இதனால் நடப்பதற்கும் வண்டிகள் நேராக செல்வதற்கும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு கஷ்டமாகத்தான் இருக்கின்றது. கட்சிகள் இதையெல்லாம் கண்டுக்காமல் ஒரு இறப்பு நடந்தால்தான் பேசுகின்றனர். அரசதிகாரிகள் அரசு வேலைகள் செய்பவர்கள் சம்பளத்தை விட அதிக பணத்தையே எப்படி மக்களிடமிருந்து பெறலாமென்றுதான் யோசிக்கிறார்களே தவிர. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய்பவர்கள் ஒரு சிலரே.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி