/ தினமலர் டிவி
/ பொது
/ அதிகாரிகளின் அலட்சியம்: மழைநீர் கால்வாயில் சரிந்த கோயில் | Chennai waterlogging | Puthu Vannarapetta
அதிகாரிகளின் அலட்சியம்: மழைநீர் கால்வாயில் சரிந்த கோயில் | Chennai waterlogging | Puthu Vannarapetta
சென்னை புது வண்ணாரப்பேட்டை, இளைய முதலிதெரு சிறு மழைக்கே தாங்காது. சில மணி நேரம் மழை பெய்தாலே குளம் போல வெல்லாம் தேங்கிவிடும் இதனால் அப்பகுதியை ஒட்டிய இந்திரா நகரில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடக்கிறது. அதற்காக தோண்டப்பட்ட குழிக்கு அருகிலேயே விநாயகர் கோயில் இருந்தது. கோயிலுக்கு பாதிப்பு வராத வாயில் பணிகள் நடக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். ஆனால் வடிகால் பணி நடக்கும் போதே கோயில் சரிந்து ஐம்பொன்சிலை, கலசத்துடன் குழிக்குள் விழுந்துள்ளது. இதில் ஐம்பொன் சிலை உடைந்து விட்டது. மாநகராட்சி அதிகாரிகள், கான்ட்ராக்டர் அலட்சியமே கோயில் இடிய காரணம் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறினர்.
அக் 04, 2025