/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சி மாணவிக்கு நடந்தது என்ன? அமைச்சர் பகீர் | Trichy school girl case | chinese buldak noodles
திருச்சி மாணவிக்கு நடந்தது என்ன? அமைச்சர் பகீர் | Trichy school girl case | chinese buldak noodles
உயிரை பறித்த சீன நூடுல்ஸ்? அதிர வைத்த மாணவி மரணம் திடுக்கிடும் தகவல் திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமி ஸ்டெபி ஜாக்குலின். 11ம் வகுப்பு படித்து வந்த சிறுமி சம்பவத்தன்று சீன நூடுல்சை ஆன்லைனில் ஆடர் செய்து சமைத்து சாப்பிட்டார். நூடுல்ஸ் சாப்பிட்ட பிறகு தூங்க சென்ற மாணவி காலையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் கிளம்பியதால் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்து சென்றனர். மாணவியின் உயிரை பறித்தது சீன வகை நூடுல்ஸ்தான் என்று தகவல் பரவியதால் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.
செப் 03, 2024