உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கையில் மனுவுடன் சேர் மேல் ஏறி கத்திய பெண்! | CM Stalin |Stalin Speech |Kallakurichi | Viral Video

கையில் மனுவுடன் சேர் மேல் ஏறி கத்திய பெண்! | CM Stalin |Stalin Speech |Kallakurichi | Viral Video

கள்ளக்குறிச்சியில் இன்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது திடீரென ஒரு பெண் சேர் மீது ஏறி சார் சார் என கூச்சலிட்டார். கை குழந்தையுடன் கையில் மனுவை வைத்து கொண்டு முதல்வரை கூப்பிட்டார். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இதை கவனித்தனர். அந்த பெண்ணை வேகமாக கீழே இறக்கினர். அவரது கையை பிடித்து இழுத்து அங்கிருந்து வேகமாக வெளியேற்றினர். நிலத்தகராறில் பலமுறை மனு கொடுத்ததும் எந்த நடவடிக்கையும் இல்லை, அதான் முதல்வரிடம் மனு கொடுக்க கூச்சலிட்டேன் என அந்த பெண் கூறி சென்றார்.

டிச 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை