காப்பாற்ற வேண்டிய கணவனே எமனாக மாறிய கொடூரம் Andhra Pradesh | Kadapa
ஆந்திராவின் ராஜம்பேட் அருகே போயனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ். ரயில்வேயில் லோகோ பைலட்டாக வேலை செய்கிறார். இவருக்கும் மனைவி கிருஷ்ணவேணிக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டாலும், சிறிது நேரத்திலேயே சமாதானம் ஆகிவிடுவார்கள். ஆனால், இந்த முறை கணவரை மிரட்டுவதற்காக கிருஷ்ணவேணி விபரீத முடிவெடுத்தார். அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். கட்டில் மீது சேர் போட்டு, சீலிங் ஃபேனில் புடவையை கட்டி, கழுத்தில் சுருக்கு போட்டு இருக்கிறார்.
மார் 13, 2026