டில்லி to ஸ்ரீநகர் விமானத்தின் முழு கதையும் பகீர் | delhi to srinagar flight mystery | indigo 6e2142
டில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 227 பயணிகளுடன் புதன்கிழமை மாலை இண்டிகோ 6E2142 என்ற விமானம் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் டில்லி, பஞ்சாப், ஹரியானா, காஷ்மீர், உத்தரப்பிரதேசம் மாநிலங்களின் பல இடங்களை மோசமான புழுதி புயல், கனமழை, ஆலங்கட்டி மழை, இடி, மின்னல் தாக்கின. ஸ்ரீநகர் பறந்த இண்டிகோ விமானம் நடுவானில் பறந்த போது, இவ்வளவு பெரிய பேரிடரில் சிக்கிக்கொண்டது. கடைசி நேரத்தில் ஆலங்கட்டி மழை தாக்கி விமானத்தின் மூக்கு பகுதியில் மிகப்பெரிய ஓட்டை விழுந்தது. எல்லாம் முடிந்து விட்டது என நினைத்து பயணிகள் கதறிய நிலையில், பத்திரமாக ஸ்ரீநகரில் விமானத்தை தரையிறக்கி அனைவரது உயிரையும் பைலட்கள் காப்பாற்றினர். நடுவானில் விமானம் குலுங்கி குலுங்கி பறக்கும் காட்சியும், உள்ளே பயணிகள் கதறி கூப்பாடு போடும் காட்சியும் வெளியாகி நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பல திடுக்கிடும் நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன. குறிப்பாக பாகிஸ்தானின் கல்நெஞ்ச குணமும் இவ்வளவு பெரிய சிக்கலுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருந்திருக்கிறது. அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். 227 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் புதன்கிழமை மாலை இண்டிகோ 6E2142 விமானம் ஸ்ரீநகருக்கு புறப்பட்டது. அப்போது வானிலை நன்றாகவே இருந்தது. விமானம் பறக்க துவங்கிய சிறிது நேரம் கழித்து, படிப்படியாக வானிலை மாறியது. ஹரியானா, பஞ்சாப், டில்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளை மிகமோசமான புழுதி புயல் தாக்கியது.