தலை கிறுகிறுக்கும் பார் ஓனர்கள்
மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதை தடுக்கவும், மதுவால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவும், கோவை மாநகர பார் உரிமையாளர்களுக்கு போலீசார் சில கண்டிஷன்களை போட்டுள்ளனர். பாருக்கு(BAR) மது குடிக்க வருவோர் சொந்த வாகனத்தில் வந்தால், அவர்களை அழைத்து செல்ல உடன் டிரைவர் வந்து இருக்கிறார்களா? என்பதை பார் நிர்வாகிகள் உறுதிசெய்ய வேண்டும். டிரைவர் இல்லாவிட்டால், மது குடித்தவரை வீட்டில் கொண்டு சென்று விட, டிரைவருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது நம்பிக்கையான டிரைவரை ஏற்பாடு செய்து, மது குடித்தவரின் சொந்த வாகனத்திலேயே அவரை வீட்டில் டிராப் செய்ய வேண்டும்.
ஆக 26, 2024