உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வியாசர்பாடி டிப்போவில் மின்சார பஸ் பேட்டரி வெடித்தது | Electric Bus | Chennai EV Bus

வியாசர்பாடி டிப்போவில் மின்சார பஸ் பேட்டரி வெடித்தது | Electric Bus | Chennai EV Bus

முதல்வர் துவங்கிய மின்சார பஸ்! ஒரே வாரத்தில் பேட்டரி வெடித்தது 2 ஊழியர்கள் கை கருகியது சென்னையில் 208 கோடி ரூபாய் செலவில் 120 மின்சார பஸ்களை கடந்த 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பிராட்வே - கிளாம்பாக்கம், வள்ளலார் நகர் - செங்குன்றம், பெரம்பூர் - மணலி உட்பட 11 வழித்தடங்களில், 120 மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு, வியாசர்பாடி டிப்போவில் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம், 32 சார்ஜ் பாயின்ட்டுகள் உள்ளன. மின்சார பஸ் துவங்கிய முதல் நாள் முதல், தினமும் மூன்று பஸ்கள் வரை ஆங்காங்கே பிரேக் டவுன் ஆகி நின்றன. இந்த நிலையில் தற்போது பேட்டரி வெடிக்கும் சம்பவம் நடந்திருப்பது பீதியை கிளப்பியுள்ளது. வியாசர்பாடி டிப்போவில் மின்சார பஸ்களுக்கு சார்ஜ் ஏற்றும் பணியில் கோவையை சேர்ந்த பரத்குணா, மஹாராஷ்டிராவை சேர்ந்த ஷாம் ஈடுபட்டிருந்தனர். மின்சார பேருந்தின் பேட்டரியை கழற்றி, பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக பேட்டரியின் மல்டி மீட்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், பரத்குணா, ஷாம் ஆகியோரின் இடது, வலது கை கருகியது. அருகில் இருந்த ஊழியர்கள் அவர்களை மீட்டு, ஸ்டான்லி ஆஸ்பிடலில் சேர்த்தனர். பின் அங்கிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். சம்பவம் குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மின்சார பஸ் திட்டம் வரவேற்கக்கூடியது. அதைவிட பயணிகள் பாதுகாப்பு மிக முக்கியம். டிப்போவில் பேட்டரி வெடித்ததுபோல், பஸ் ஓடும்போது நடந்தால் என்ன செய்வது? மழைக்காலத்தில் இந்த பேருந்துகளை எப்படி இயக்குவார்கள் என தெரியவில்லை. பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறனர் ஆர்வலர்கள்.

ஜூலை 08, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sasikumaren
ஜூலை 09, 2025 03:46

தரமான மின்சார வாகனங்களுக்கு தரமிக்க பேட்டரிகள் மிக அவசியம் இது திருட்டு மாஃபியா கும்பல் இதுகளிடம் தரம் பற்றி பேசினால் கமிஷன் எவ்வளவு என்று கேட்பான்கள் கடவுள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.


Easwar Samban
ஜூலை 08, 2025 20:09

போக்குவரத்து சம்மந்தமாக மக்களின் குறைகளை கண்டறிய குறை தீர்க்கும் நாளை போக்குவரத்து மந்திரி தொடர்ந்து நடத்தி மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும். தற்போது மக்களின் குறைகளை தீர்க்க எவரும் முன் வரவில்லை. போக்குவரத்து கழகம் ஆண்கள் அமருமிடம் / முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி அமருமிடம் என்கிற ஸ்டிக்கரை யாருடைய அனுமதியில் கிழித்தெறிந்தது. பல முறை கூறியும் செவிசாய்க்கவில்லை.. 23/சி வழித் தடம் இன்றைய மழைக்கு அருவி போல தண்ணீர் பேருந்தின் உள்ளே வலது பக்கம் கொட்டுகிறது. உடனடியாக கவனிப்பார்களா போக்குவரத்துக்கழகம்.


xyzabc
ஜூலை 08, 2025 11:51

திராவிட மாடல் உடைய சாதனைகள் குறித்து விமரிசிக்க வேண்டாம். மக்களின் மறதியே நம்பிக்கை.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை