உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கலர் பிரின்டிங் மிஷின், கள்ளநோட்டுகள் பறிமுதல்! Fake Currency | 500 Rupee Note | Trichy

கலர் பிரின்டிங் மிஷின், கள்ளநோட்டுகள் பறிமுதல்! Fake Currency | 500 Rupee Note | Trichy

திருச்சியில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து ரகசியமாக விசாரித்து வந்தனர். ஆளவந்தான் நல்லூர் பகுதியில் பைக்கில் சென்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவரது பாக்கெட்டில் நான்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது. விசாரணையில் அவர் சோமரசம்பேட்டை ஆளவந்தான் நல்லூர் பகுதியை சேர்ந்த பவுல்ராஜ் என்பது தெரிந்தது. அவரது வீட்டில் சோதனை செய்ததில் கலர் பிரின்டிங் மிஷின், ஸ்மார்ட் போன், ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள், அச்சிடப்பட்டு வெட்டப்படாமல் இருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ஏப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி