பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஜி7 கூட்டமைப்பு கண்டனம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதனால் பாகிஸ்தான் ராணுவம், இந்திய குடியிருப்பு பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவை நோக்கி வந்த ஏவுகணை மற்றும் ட்ரோன்களை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு தகர்த்து எறிந்தது. தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருதால், இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஜி 7 கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
மே 10, 2025