கேள்விக்குறியான அங்கன்வாடி பணியாளர்களின் வாழ்க்கை | Govt Building Damaged | Rain water | krishnagiri
மழையில் நனைந்த ஆவணங்கள் வெளியில் சொல்லாத அதிகாரி விழிபிதுங்கும் பணியாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கோர்ட் பின்புறம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் உள்ளது. இதன் கீழ் ஊத்தங்கரை ஒன்றியத்தில் சுமார் 166 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. 2000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அங்கன்வாடி ஆசிரியர், உதவியாளர் என சுமார் 252 பேர் வேலை செய்கின்றனர். இந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக கட்டடம் முழுமையாக சிதிலமடைந்துள்ளது. கட்டடத்தின் உள் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழும் என்பது போல் இருக்கிறது. இந்த அலுவலகத்தில் ஆசிரியர்களின் எஸ் ஆர் புத்தகம், சர்வீஸ் பதிவேடு மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் ஆவணங்கள் பாதுகாக்கப்படுகிறது. டிசம்பர் துவக்கத்தில் வீசிய பெஞ்சல் புயல் மழையால் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்குள் வெள்ளம் புகுந்தது. 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால், அங்கு வைத்திருந்த ஆவணங்கள், குழந்தைகளுக்கு வழங்க வைத்திருந்த சீருடைகள் அனைத்தும் முழுமையாக நீரில் மூழ்கி வீணானது. பணியில் இருக்கும் ஊழியர்களின் சர்விஸ் புத்தகம் அனைத்தும் மழை நீரில் நனைந்து அதிலுள்ள எழுத்துக்கள் முழுவதுமாக அழிந்ததால் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.