ஒசூரில் பெய்த கனமழை சாலைகளில் வெள்ளப்பெருக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கனமழை பெய்தது. ஒசூர் பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை, பாகலூர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஆறு போல மாறின. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் வெள்ளத்தில் சிக்கி தடுமாறினர். சிலர் நிலைத்தடுமாறி விழுந்தனர்.
மே 19, 2025