/ தினமலர் டிவி
/ பொது
/ உளவியல் போருக்காக பெண்கள் படை! எச்சரிக்கிறது உளவுத்துறை | Intelligence | Army | Terrorist
உளவியல் போருக்காக பெண்கள் படை! எச்சரிக்கிறது உளவுத்துறை | Intelligence | Army | Terrorist
பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகரிக்கவும், மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு ரகசிய படை ஒன்றை உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முற்றிலும் பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இப்பெண்கள் படைக்கு உளவியல் ரீதியிலான தாக்குதலுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக தவறான தகவல்களை பரப்புவது, மக்களின் மனநிலையை பாதிக்கும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட சதி வேலைகளில் பெண்கள் படையினர் ஈடுபட உள்ளனர்.
அக் 10, 2025