உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை சம்பவம் செய்த ஜெய்சங்கர் Jaishankar on Global South | india vs pakistan

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை சம்பவம் செய்த ஜெய்சங்கர் Jaishankar on Global South | india vs pakistan

அரசு முறை பயணமாக ஐரோப்பா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், குளோபல் சவுத் நாடுகளின் மிகப் பெரிய அச்சுறுத்தல்களில் பயங்கரவாதம் முதன்மையானதாக இருப்பதாக கூறினார். இது குறித்து, அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: ஆப்ரிக்கா, ஆசியா, தென் அமெரிக்காவில் உள்ள நாடுகள், ஓசியானா எனப்படும் ஆஸ்திரேலியா, பிஜி, நியூசிலாந்து, பப்புவா நியூகினியா உள்ளிட்ட குளோபல் சவுத் நாடுகள் பல அச்சுறுத்தல்களை சந்திக்கின்றன. பருவநிலை மாற்றம், வறுமை, நீண்ட கால கோவிட் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இவற்றை விட பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நடந்த சண்டை, காஷ்மீர் பிரச்னை அல்ல. அது பயங்கரவாத தாக்குதலால் நடந்தது. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எங்கள் எல்லையில் நடக்கும் தொடர் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வர நாங்களே முயற்சிக்கிறோம் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. இதில் மூன்றாவது நாடு தலையிடுவதை நாங்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. செல்வம் கொழிக்கும் ஐரோப்பிய நாடுகள், கச்சா எண்ணெய் வாங்க மத்திய கிழக்கு நாடுகளின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளன. ஏனென்றால், அவர்களுக்கு ரஷ்யாவுடன் ஒத்துப்போக முடியாது. என்ன விலை கொடுத்தும் கச்சா எண்ணெய் வாங்க முடிவெடுத்த ஐரோப்பிய நாடுகளால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இது எங்களை போன்ற பல நாடுகளுக்கும் பெரும் பிரச்னையாக அமைந்தது. நிறைய பணம் கிடைப்பதால் மத்திய கிழக்கு நாடுகளும், ஐரோப்பிய நாடுகளுக்கே கச்சா எண்ணெய் விற்பதில் அதிக கவனம் செலுத்தின. பிற நாடுகள் நிலை என்ன ஆகும் என்பது பற்றி யோசிக்கவில்லை. எங்களுக்கு எரிசக்தியும் அதற்கான எரிபொருளும் வாழ்வா, சாவா பிரச்னை. அதனால், எங்கள் எரிபொருள் தேவையை நாங்களே பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானது. அதே நேரம் 2008ல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலையை மேற்கத்திய நாடுகளால் தனியாக சமாளிக்க முடியவில்லை. எனவே தான் ஜி7, ஜி8 என்ற கூட்டமைப்பு ஜி20 ஆக மாறியது. ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்ட போது, அதில் 50 நாடுகள் உறுப்பினராக இருந்தன. இப்போது அந்த எண்ணிக்கை 200ஐ தொட உள்ளது. அது எப்படி நிகழ்ந்தது. ஐநாவில் இடம் பெற்றுள்ள பல நாடுகள் இப்போது தங்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என உணர்கின்றன. அந்த அமைப்பு ஒருதலைப்பட்சமான முடிவெடுக்கும் நிலையில் இருப்பதாக உணர்கின்றன. அப்படி உணர்கையில் உலக நாடுகள் வேறு ஒரு புதிய அமைப்பை நோக்கி ஓடுகின்றன. அரசியல் என்பது தண்ணீரை போன்றது. அது சமநிலையை தேடி ஒடக்கூடியது.

மே 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை