உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் ஆன்மிக அணி ஆட்சிக்கு வரும்: காடேஸ்வரா சுப்ரமணியம் |Kadeshwara Subramaniyam|Trichy

தமிழகத்தில் ஆன்மிக அணி ஆட்சிக்கு வரும்: காடேஸ்வரா சுப்ரமணியம் |Kadeshwara Subramaniyam|Trichy

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடல் அடக்கம் செய்யப்பட்ட திருச்சி சீராத்தோப்பு பாரதியார் குருகுல மையத்தில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ராமகோபாலனின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு குருபூஜை நடத்தப்பட்டது. ராமகோபாலன் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தற்போதைய தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஆத்மஜோதி பூஜை மற்றும் புஷ்பாஞ்சலி நடந்தது. இதில் இந்து முன்னணியினர், ஆர்எஸ்எஸ் அமைப்பினர், பாஜவினர் கலந்து கொண்டனர்.

அக் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை