உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாராயம் குடித்தவர்களை வீடு வீடாக தேடிய போலீஸ்

சாராயம் குடித்தவர்களை வீடு வீடாக தேடிய போலீஸ்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். மழுவங்கரணை பகுதியை சேர்ந்த விவசாயி தேவன், தமது விளைநிலத்தில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கு அங்கேயே ஊறல் போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சி கொடுத்தது தெரிந்தது. உஷார் அடைந்த போலீசார், தேவன் கொடுத்த கள்ளச்சாராயத்தை குடித்த அய்யனார், பெருமாள், மணி ஆகியோரை தேடி கண்டுபிடித்தனர். உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். மருத்துவ பரிசோதனையில் மூவரும் கள்ளச்சாராயம் குடித்தது உறுதியானது. ஆனால், எந்த பாதிப்பும் இல்லை என டாக்டர்கள் கூறினர்.

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி