உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உயர் ரக கஞ்சாவுடன் சிக்கிய நபரால் ஏர்போர்ட்டில் பரபரப்பு |Kanja|Seized|Smuggling|Chennai airport

உயர் ரக கஞ்சாவுடன் சிக்கிய நபரால் ஏர்போர்ட்டில் பரபரப்பு |Kanja|Seized|Smuggling|Chennai airport

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, சென்னை ஏர்போர்ட் வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று வந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் வந்தது. அவரது சூட்கேசை நன்கு ஆராய்ந்தனர். அப்போது அவரது பொருட்களுக்குள், இரண்டு பார்சல்கள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது பதப்படுத்தப்பட்ட உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு பார்சல்களிலும் மொத்தம் 971 கிராம் உயர் ரக கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய். கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், கஞ்சாவை கடத்தி வந்த பயணியிடம் விசாரணை நடத்துகின்றனர். இந்த உயர் ரக கஞ்சாவை யாருக்கு கொடுக்க கடத்தி வந்தார் கடத்தலின் பின்னணியில் இருக்கும் போதை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. சென்னை ஏர்போர்ட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய உயர் ரக ஹைட்ரோபோனிக் கடத்தல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மே 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை