உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கிரஸ் எம்பி கார்த்தி என்ன செய்தார்? சிபிஐ பரபரப்பு | Karti Chidambaram | CBI case | Diageo Scotl

காங்கிரஸ் எம்பி கார்த்தி என்ன செய்தார்? சிபிஐ பரபரப்பு | Karti Chidambaram | CBI case | Diageo Scotl

காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய நிதி அமைச்சராக சிதம்பரம் இருந்தார். அவரது பதவியை தவறாக பயன்படுத்தி சிதம்பரத்தின் மகன் கார்த்தி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக ஐஎன்எஸ் மீடியா வழக்கு தொடர்பாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து 2018ல் கார்த்தி கைதானார். பின்னர் சிதம்பரமும் கைது செய்யப்பட்டு விடுதலையானார். இந்த நிலையில் வெளிநாட்டு மதுபான நிறுவனத்துக்கு உதவ லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்பி காா்த்தி மீது சிபிஐ புதிய ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தை சோ்ந்த டியா ஜியோ நிறுவனம் தனது தயாரிப்பான ஜானி வாக்கா் விஸ்கியை இந்தியாவில் இறக்குமதி செய்துவந்தது. டூட்டி பிரீ எனப்படும் வரியில்லாமல் இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபட்டது. வரியில்லாத வெளிநாட்டு மதுபானங்களை விற்பதற்கு இந்திய சுற்றுலா மேம்பாட்டு கழகம் அனுமதி அளிக்கும். முறைகேடு புகாரை தொடர்ந்து 2005ல் ஜானி வாக்கா் விஸ்கிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 70 சதவீதம் இந்த விஸ்கியே இடம்பெற்றிருந்தது. இதனால் டியாஜியோ குழுமத்தின் இந்திய வணிகத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய சுற்றுலா மேம்பாட்டு கழகம் விதித்த தடையை நீக்க உதவுமாறு காா்த்தி சிதம்பரத்தை டியா ஜியோ குழுமம் அணுகியது. அதற்காக அவரது அட்வான்டேஜ் ஸ்ட்ரடீஜிக் கன்சல்டிங் நிறுவனம் மூலம் 13 லட்சம் ரூபாயை காா்த்தி ஆலோசனை கட்டணமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி