உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / என்ஐஏ முழுமையாக விசாரிக்க ரயில்வே வாரியத்துக்கு சிறப்பு குழு பரிந்துரை! Train Accident | NIA

என்ஐஏ முழுமையாக விசாரிக்க ரயில்வே வாரியத்துக்கு சிறப்பு குழு பரிந்துரை! Train Accident | NIA

கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து, 2024 அக்டோபர் 11ம் தேதி, மேற்கு வங்கம் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயில் கவரப்பேட்டை ரயில் நிலையத்துக்கு இரவு 10:30 மணிக்கு வந்த போது, தண்டவாளத்தில் தடம் மாறி வேறு பாதையில் சென்று, அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் விரைவு ரயிலின், 13 பெட்டிகள் தடம் புரண்டன. அதில் ஒரு பெட்டி முழுமையாக தீப்பற்றி எரிந்தது. விபத்தில், 19 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து விசாரிக்க, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தலைமையில் உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு, முழுமையாக விசாரணை நடத்தி, ரயில்வே வாரியத்திடம் அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையில், விரைவு ரயில் வந்த பிரதான பாதையின், சிக்னல் உள்ளிட்ட அமைப்பு தானாக செயலிழந்து மாற்றம் அடையவில்லை. சமூக விரோதிகளால் தண்டவாள பாதை வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சதி செயலால் விபத்து நடந்துள்ளது. சமூக விரோதிகளால் பாதை மாற்றப்பட்டதால், விரைவு ரயில் மாற்றுப் பாதையில் சென்று, சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. விபத்தின் போது பெரிய அளவில் பாதிப்பு தவிர்க்கப்பட்டதற்கு, ரயில் ஓட்டுனர் சுப்பிரமணி துரிதமாக செயல்பட்டு வேகத்தை குறைத்ததே முக்கிய காரணம் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது. அவரை பாராட்டி விருது வழங்கவும் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது. நாசவேலையால் நிகழ்ந்த விபத்து என்பதால், தேசிய புலனாய்வு முகமை முழுமையாக விசாரிக்கவும், ரயில்வே வாரியத்திற்கு குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆக 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை