கேரளா நடுங்கியதன் பின்னால் வவ்வால் கடித்த பழம் | kerala nipah virus | niphah death in kerala | Nipah
மலப்புரம் மாணவன் மரணம் நிபா வைரஸ் வந்தது எப்படி? கேரளாவே அதிருது! கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பாண்டிக்கோட்டை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த ஜூனில் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் மாதிரி, மஹாராஷ்டிராவின் புனே தேசிய வைராலஜி இன்ஸ்டிட்யூட்டில் நடத்தப்பட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், ஜூலை 21ம் தேதி சிறுவன் இறந்தான். இறப்பு குறித்து சுகாதார துறையினர் விசாரணை நடத்தினர். சிறுவன் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் உள்ள ஒரு கடையில் பழம் வாங்கி சாப்பிட்டதும், அந்த கடையில் வவ்வால்கள் நடமாட்டம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.. வவ்வால்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டன. வவ்வால்களில் இருந்து நிபா வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுவன் பழம் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படும் பகுதியில் இருந்து 27 வவ்வால்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், ஆறு வவ்வால்களில் நிபா வைரஸ் இருந்தது என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.