/ தினமலர் டிவி
/ பொது
/ ஆம்புலன்ஸ் குலுங்கியதில் இறந்தவர் பிழைத்தது எப்படி? | Kolhapur | Ambulance | Man Alive
ஆம்புலன்ஸ் குலுங்கியதில் இறந்தவர் பிழைத்தது எப்படி? | Kolhapur | Ambulance | Man Alive
மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டம் கசாபா-பவாடா பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங். வயது 65. இவருக்கு கடந்த டிசம்பர் 16ம் தேதி ஹார்ட் அட்டாக் வந்தது. அருகில் இருந்த தனியார் ஆஸ்பிடலுக்கு ஆம்புலன்ஸ்சில் அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டார் என கூறினர். இதையடுத்து உறவினர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. பாண்டுரங்கின் இறுதி சடங்கு ஏற்பாடுகள் வீட்டில் தடபுடலாக நடந்தது. இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட அவரது உடலுடன் ஆம்புலன்ஸ் வீடு திரும்பியது.
ஜன 04, 2025