/ தினமலர் டிவி
/ பொது
/ நடந்தது விபத்து தான் போலீஸ் சொல்லும் விளக்கம் | Madurai Adheenam | Madurai Adheenam car
நடந்தது விபத்து தான் போலீஸ் சொல்லும் விளக்கம் | Madurai Adheenam | Madurai Adheenam car
மதுரை ஆதீனம் சென்னை சைவ மாநாட்டில் கலந்து கொள்ள மே 2ம் தேதி உளுந்தூர்பேட்டை வழியாக சென்று கொண்டு இருந்தார். அஜீஸ் நகர் ரவுண்டானா பகுதியில் பிரிவு சாலை வழியாக கடக்க முயன்ற போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மோதியது. நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. மதுரை ஆதீனம் தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். கள்ளக்குறிச்சி போலீசார் இது தொடர்பாக விசாரித்து விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர்.
மே 05, 2025