வெள்ளத்தில் சிக்கிய கார் மீட்கப்படும் காட்சி | Maduravoyal | Chennai
சென்னை, மதுரவாயல் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் அருகே அடையாளம்பட்டு கூவம் தரைப்பாலம் கமைழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியது. தரைப்பாலத்தின் இருபுறமும் போலீசார் கயிறு கட்டி பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை முகப்பேரை சேர்ந்த சுனில் வர்க்கீஸ் என்பவர், தனது சொகுசு காரில் ஆபத்தை உணராமல் தரைபாலத்தை கடக்க முயன்றார். அப்போது வெள்ளத்தில் சிக்கிய கார் இழுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த தடுப்புகளில் சிக்கிக்கொண்டது. தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், உயிருக்கு போராடிய கார் உரிமையாளரை காரின் கண்ணாடியை உடைத்து மீட்டனர்.
டிச 14, 2024