பாலியல் குற்றங்களுக்கு தூக்கு மே.வங்கத்தில் மசோதா 'பாஸ்'!
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையின் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதி கேட்டு இன்னமும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இச்சூழலில், மேற்குவங்க சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, அபராஜிதா பெண் மற்றும் குழந்தை குற்றவியல் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் மரணம் அடைந்தாலோ, உடல் ரீதியாக முடக்கப்பட்டாலோ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க இந்த சட்ட திருத்தத்தில் இடமுண்டு. பாலியல் குற்றவாளிகளுக்கு பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்க முடியும்.
செப் 03, 2024