உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முல்லைப் பெரியாறு வழக்கில் சுப்ரீம்கோர்ட் புதிய உத்தரவு Mullaiperiyar dam |maintenance |supreme cour

முல்லைப் பெரியாறு வழக்கில் சுப்ரீம்கோர்ட் புதிய உத்தரவு Mullaiperiyar dam |maintenance |supreme cour

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சூரிய காந்த், திபாங்கர் தத்தா, கோடீஸ்வர் சிங் அமர்வு விசாரித்தது. தமிழக அரசின் வக்கீல் வாதிடும்போது, அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கேரள அரசு அனுமதிப்பது இல்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடித்தான் தமிழக அரசு உத்தரவுகளைப் பெற்று வருகிறது. அந்த உத்தரவுகளையும் செயல்படுத்த கேரள அரசு முட்டுக்கட்டை போடுகிறது என வாதிட்டார். கேரளா அரசு வக்கீல் வாதிடும்போது, அணையை பராமரிக்க தமிழக அரசு விருப்பம் காட்டவில்லை. நீர் மட்டத்தை உயர்த்துவதில் மட்டுமே குறியாக இருக்கிறது என்றார்.

மே 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ