/ தினமலர் டிவி
/ பொது
/ மாயமானவர் பற்றிய தகவலுக்காக காத்திருக்கும் குடும்பத்தினர் mumbai boat accident
மாயமானவர் பற்றிய தகவலுக்காக காத்திருக்கும் குடும்பத்தினர் mumbai boat accident
அரபிக்கடலில் உள்ள எலிபென்டா தீவுக்கு மும்பை கடற்கரையில் இருந்து சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற படகு நேற்று கடலில் மூழ்கியது. கடற்படை படகின் இன்ஜின் வேகத்தை பரிசோதித்து கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக பயணிகள் படகு மீது அதிவேகமாக மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது. 13 பேரின் உயிர் பறிபோனது. அதில் மாயமான இரண்டு பேரை தேடும் பணி தொடர்கிறது. காணாமல் போனவர்களில் ஒருவர் மும்பையை சேர்ந்த 43 வயதான ஹன்சராம் பதி. நகைபட்டறை நடத்தி வந்தார்.
டிச 19, 2024