/ தினமலர் டிவி
/ பொது
/ ஏர்பஸ் விமானங்கள் ஓடும் தொழில் வர்த்தகம் மேம்படும் Tuticorin Airport Expansion | New terminus
ஏர்பஸ் விமானங்கள் ஓடும் தொழில் வர்த்தகம் மேம்படும் Tuticorin Airport Expansion | New terminus
துாத்துக்குடி ஏர்போர்ட்டை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள ஏர்போர்ட்டில் 78 பேர் பயணிக்கும் வகையில், ஏடிஆர் வகை விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான நிலைய விரிவாக்கத்திற்கு பின், 250 பேர் பயணிக்கும் ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க முடியும். துாத்துக்குடி - சென்னை இடையே தினமும் 5 முறையும், துாத்துக்குடி - பெங்களூரு இடையே தினமும் 2 முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, 227 கோடி ரூபாய் மதிப்பில், 17 ஆயிரம் சதுர மீட்டரில் புதிய முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஜூலை 15, 2024