உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தெலங்கானா துணை முதல்வர் வீட்டில் நகை, பணம் கொள்ளை | Telangana Dy CM | Theft | arrested |West bengal

தெலங்கானா துணை முதல்வர் வீட்டில் நகை, பணம் கொள்ளை | Telangana Dy CM | Theft | arrested |West bengal

தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு துணை முதல்வராக இருப்பவர் பட்டி விக்ரமார்கா. இவர் இப்போது ஹைதராபாத்தின் பேகும்பேட் பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் வசிக்கிறார். குடும்பத்துடன் அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது சொந்த வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேற்கு வங்கத்தின் காரக்பூர் ரயில் நிலையத்தில் ஜி.ஆர்.பி போலீசார் வழக்கமான சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது 7வது பிளாட்பார்மில் வந்த 2 பேர் போலீசை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். உஷாரான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், பீகாரை சேர்ந்த ரோஷன்குமார் மண்டல், உதய்குமார் தாக்கூர் என்பது தெரிந்தது. அவர்கள் வைத்திருந்த பைக்குள் தங்கம், வெள்ளி நகைகள், கட்டு கட்டாக பணம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். வீடுகளில் கொள்ளையடிக்கும் திருடர்களான இருவரும், தெலங்கானா துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா வீட்டில் கொள்ளையடித்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி