விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த தலைமை நீதிபதி சந்திரசூட் | CJI Chandrachud Explanation |Ayodhya
சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதி சந்திரசூட் வரும் 10ம் தேதி ஓய்வு பெறுகிறார். சமீபத்தில் மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்றிருந்தார். அங்கு நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், அயோத்தி வழக்கில் நல்ல தீர்ப்பு சொல் என கடவுளிடம் வேண்டிக்கொண்டதாகவும், அதன்படி சட்டத்தின் துணையோடு நேர்மையான தீர்ப்பை வழங்கியதாகவும் கூறியிருந்தார். இதற்கு பகுத்தறிவுவாதிகள் தரப்பில் விமர்சனம் எழுந்தது. அயோத்தி தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் வரவில்லையா.. எல்லாமே உங்கள் கடவுளிடம் கேட்டுத்தான் தீர்ப்பாக வாசிக்கிறீர்களா?” என்று கிண்டல் கேலி செய்தனர். இந்நிலையில் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த சந்திரசூட் இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.