சீமான் மீதான அதிருப்தியால் அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள் | Seeman | NTK | Sudden change
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு 8.9 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. தேர்தல் முடிவுக்கு பின், சீமான் செயல்பாடுகளால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக அக்கட்சியில் இருந்து பலர் விலகி வருவது அதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில், நிர்வாகிகள் பலர் கடந்த மாதம் கட்சியில் இருந்து விலகினர். அவரை தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகினார். சீமானுக்கு நெருக்கமாக இருந்த விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலர் பூபாலனும் விலகினார். பின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலர் மணிகண்டனும் விலகினார். சமீபத்தில், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சியும் விலகி இருக்கிறார். இந்த நிலையில், மாநில பெண் நிர்வாகி உட்பட 2 பேர், பா.ஜவில் இணைய பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.