காலை சுற்றும் 2019 வழக்கு! வேலூரில் பரபரப்பு | ED Raid | DMK | Minister Duraimurugan|MP Kathir Anand
2019 லோக்சபா தேர்தலின் போது வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரில் துரைமுருகன் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். கணக்கில் வராத பணம் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கதிர் ஆனந்த்துக்கு நெருக்கமான திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் சோதனை நடந்தது. இதில் சீனிவாசன் வீட்டில் 11 கோடி பணம் சிக்கியது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீனிவாசனிடம் பலமுறை நேரடி விசாரணை நடந்த நிலையில் அவரது வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். சீனிவாசன் வேலூர் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை அமைப்பாளராக உள்ளார்.